பொறுப்புத் துறப்பு
நினைவுகளின் தொடர்கதை: ஒரு பேரன்பின் காவியம்
(கடலைத் தேடும் நதி)பொறுப்புத் துறப்பு (Disclaimer)இதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்தும் இல்லை; மீராவும் இல்லை. அவர்களின் திருமணமும் Perfect அல்ல. ஆனால் அந்த Imperfect வாழ்க்கைக்குள் இருந்த அன்பு உண்மையானது.இந்தக் கதை ஒரு மனிதனை Perfect hero-ஆக உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. ஒரு மனிதன் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக வாழ முடியும் என்பதைச் சொல்வதற்காக எழுதப்பட்டது.அரவிந்த் என் வாழ்க்கையில் இருந்த மனிதர். அவர் என்னை நேசித்தார்; அவரது சுவாசமும் நேசமும் என்னை நிரப்பியது. அந்த மூச்சுக்காற்று இன்றும் என்னைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. என்னைப் பாதுகாத்தார்; என்னை வழிநடத்தினார். அதே நேரத்தில், ஒருநாள் நான் அவரில்லாமல் உலகத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டியிருக்கும் என்பதை அறியாமலேயே, அதற்காக என்னைத் தயார்படுத்தினார்.அதற்காக, இந்தக் கதையின் முடிவிலும் அவருக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று:நன்றி, அரவிந்த். நீங்கள் இருந்தபோதும் என்னை வழிநடத்தினீர்கள். நீங்கள் இல்லாதபோதும் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.இது அரவிந்தின் கதை மட்டும் அல்ல… அவரால் உருவான மீராவின் கதையும்கூட!அரவிந்த்… நாம் சேர்ந்து இருந்தபோது நான் உங்களை ஏதாவது ஒரு விதத்தில் மனசு வருத்தப்படுத்தும் படி நடந்திருந்தாலோ, சரியாகக் கவனிக்காமல் விட்டிருந்தாலோ, அல்லது கோபத்தில் ஏதாவது பேசியிருந்தாலோ… தயவுசெய்து என்னை மன்னியுங்கள் அரவிந்த்.Please forgive me and I am truly sorry!— மீரா








